குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் அனைவரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பது பெற்றோரின் சார்பாக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.அந்த கோரிக்கினை ஏற்று இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் பிரியங்கா ஆனந்தன்,தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் 500 லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய சுத்திரிக்கரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்தப்பட்டது.

இந்த இயந்திரத்தின தொடக்க விழாவிற்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம்,மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன்,கலந்துகொண்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் ரிப்பனை மாணவர்களுடன் சேர்ந்து அவர்கள் தொடக்கி வைத்து மாணவிகளுக்கு குடிநீர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்வந்த் ராவ், அச்சரபாக்கம் பேரூர் கழக செயலாளர் முருகதாஸ், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story