பாஞ்சாலங்குறிச்சி கோயில் திருவிழா - 144-ன் கீழ் தடை உத்தரவு!

பாஞ்சாலங்குறிச்சி கோயில் திருவிழா - 144-ன் கீழ் தடை உத்தரவு!

பைல் படம் 

பாஞ்சாலங்குறிச்சி கோயில் திருவிழாவை முன்னிட்டு 144-ன் கீழ் தடை உத்தரவை ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் 10.05.2024 மற்றும் 11.05.2024 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 09.05.2024 மாலை 6.00 மணி முதல் 12.05.2024 காலை 6.00 மணி வரை மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story