கட்சி சீல், லெட்டர்பேடு திருட்டு - நடிகர் மன்சூர் அலிகான் புகார்

கட்சி சீல், லெட்டர்பேடுகளை திருடிச் சென்று விட்டதாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி பொதுச்செயலாளர் மீது நடிகர் மன்சூர் அலிகான் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் திடீரென நீக்கி விட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கண்ணதாசன் மீது நடிகர் மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி"யின் சீல், லெட்டர்பேடுகள், ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பொதுச் செயலாளர் கண்ணதாசன் திருடிச் சென்று விட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story