ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

பரிசல் இயக்க அனுமதி


தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது.

அதனைத் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கி கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று நிலவரப்படி 7,500 கன அடியாக குறைந்தது நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் கடந்த இரு தினங்களாக பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இன்றும் 7,500 கன அடியாக நீர்வரத்து தொடர்ந்து நீடித்து வருவதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

Tags

Next Story