தோட்டத்தில் தீ வைத்த நபர் தீ வளையத்திற்குள் சிக்கி பலி

கரூர் அருகே விவசாய தோட்டத்தில் புற்களை அகற்றுவதற்காக தீ வைத்த நபர் தீ வளையத்திற்குள் சிக்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், சின்னத்தாராபுரம் அருகே உள்ள T.வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று காலை சுமார் 7:30- மணி அளவில், தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் தரிசு நிலத்தில் உள்ள புற்களை அகற்றுவதற்காக தோட்டத்திற்கு தீ வைத்துள்ளார்.

இந்நிலையில், தோட்டத்தில் சுற்றியும் தீ பரவியதால் உள்ளே சென்ற மணிமாறன் வெளியே வர முடியாமல் தீ வளையத்திற்குள் மாட்டிக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபொழுது உடல் முழுவதும் தீ காயம் ஏற்பட்டு சம்பவம் இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சின்ன தாராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மணிமாறன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், வயலில் எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தார். இவர் மாநகராட்சி பணியில் இருந்து வரும் 30-ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், தனது தோட்டத்தில் தீ வைப்பதற்காக சென்ற நபர், தீ வலைதிற்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story