இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

திமுக, காங்கிரஸ் இடையே நாளை நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை தற்காலிகமாக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் 10ம் தேதி வரை நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது, இதனால் ஏற்கனவே கடந்த ஜனவரி 28ம் தேதி திமுக காங்கிரஸ் இடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிகள் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தேர்தலுக்காக தமிழக காங்கிரஸ் கட்சியுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே 13ம் தேதி ஆலோசனை நடத்த இருந்ததாக அறிவித்த நிலையில் அதுவும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி பேச்சு வார்த்தை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தமிழகம் வருகை குறித்த தகவல்கள் பின்னர் வெளியாகும் என காங்கிரஸ் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags

Next Story