சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

கோப்பு படம் 

இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிங்காரவேலன் (28)என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு தொடர்பான விசாரணை தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை புதன் கிழமை நிறைவடைந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சிங்காரவேலனுக்கு இருபிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள், மூன்றுகள் என மொத்தம் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story