திருபுவனத்தில் திருட்டு : இளைஞர்கள் கைது

திருபுவனத்தில் திருட்டு : இளைஞர்கள் கைது

திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சிலைமான் ரயில்வே ஸ்டேசன் பின்புறத்தில் உள்ள உதயா என்பவரது வீட்டில் கடந்த 14.09.23-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் பின்புறம் உள்ள சிமெண்ட் கிராதி ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து 32 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக அறிவழகன், தினேஷ்குமார், கிருஷ்ணதேவா, ஹரிசெல்வம், செல்வக்குமார், கைலேஷ்குமார் ஆகியோரை திருப்புவனம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும் அவர்களிடமிருந்து சுமார் 20 ½ பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Tags

Next Story