விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - ஜூலை 10ல் வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - ஜூலை 10ல் வாக்குப்பதிவு

பைல் படம் 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்த நிலையில் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 21 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 24 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 26 ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags

Next Story