கொள்ளிடம் பாலத்திலிருந்து குதித்து இறந்த பெண் யார்?

கொள்ளிடம் பாலத்திலிருந்து குதித்து இறந்த பெண் யார்?

இறந்த பெண்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்திலிருந்து இரவு 7 மணியளவில் அடையாளம் தெரியாத பெண் ஆற்றில் குதித்துள்ளார். குதித்த இடத்தில் தண்ணீர் இல்லை, ஆனால் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொள்ளிடம் ஆற்றில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்ட அந்த பெண் யார், யாராவது அவரை தள்ளி விட்டார்களா, என கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story