பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் கைது; முக்கிய குற்றவாளி தப்பியோட்டம்

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் கைது; முக்கிய குற்றவாளி தப்பியோட்டம்

தர்மபுரியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் கைது.

தர்மபுரியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் கைது; முக்கிய குற்றவாளி தப்பியோட்டம்.

பாலக்கோடு, டிச.1: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நகரில் வடமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக மாவட்ட எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பாலக்கோடு எஸ்ஐ கோகுல் போலீசார், அண்ணா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த வடமாநில பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அப்பெண் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் கொல்கத்தா மாநிலம் மணிக்கபூரை சேர்ந்தவர் என்றும், கூலிவேலை தேடி வந்த தன்னை, ராஜாமணி(65), கோயமுத்தூரை சேர்ந்த வீராசாமி (43), சென்னை தாம்பரத்தை சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர், அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை தொப்பூர் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார், 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வீராசாமி, செல்வகுமார் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ராஜாமணியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story