10-வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் - இந்தியா விமானப்படையில் வேலைவாய்ப்பு !!

10-வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் - இந்தியா விமானப்படையில்   வேலைவாய்ப்பு !!

இந்தியா விமானப்படை

இந்திய விமானப்படையின் அக்னிவீர் பிரிவில், இசைக்கலைஞர் பிரிவிற்கு, ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியில் உமா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்திய விமானப்படையால், அக்னிவீர் வாயு ராணுவத்தில், இசைக் கலைஞர் பிரிவிற்கு, பெங்களூருவில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில், வரும் ஜூலை 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை இந்திய ராணுவம் மூலம் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் - 2.1.2004 முதல் 2.7.2007 தேதிக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் இசைக்கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும், Concert Flute / piccolo / Oboe / Clarinet in Eb/Bb / Saxophone in Eb/Bb / French horn in F/Bb / Trumpet in Eb/C/Bb / Trombone in Bb/G/ Baritone / Euphonium / Bass / Tuba in Eb/Bb அல்லது Keyboard / Organ / Piano / Guitar (Acoustic/Lead/Bass) /Violin, Viola, String Bass / Percussion / Drums (Acoustic/Electronic) / All Indian Classical Instruments உள்ளிட்ட இந்திய பாரம்பரிய கருவிகளில் ஏதேனும் ஒரு இசை கருவியை வாசிப்பதில் வல்லுநராக இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு மையத்தை அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04286 -222260 மூலமோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்வதற்கு திருமணமாகாத விருப்பமுள்ள ஆண், பெண் இருபாலரும் வருகிற ஜூன் 5ம் தேதிக்குள் https://agnipathvayu.cdac.inஎன்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

Tags

Next Story