மகள் இறந்த ஆண்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: இசைஞானி இளையராஜா

மகள் இறந்த ஆண்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: இசைஞானி இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜாவின் 81 ஆவது பிறந்தநாள், தன்மகள் இறந்த காரணத்தினால் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாடவில்லை என இளையராஜா தெரிவித்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 81 ஆவது பிறந்தநாள் இன்று. இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க 100 கும் மேற்பட்ட ரசிகர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் கூடியிருந்தனர்.

தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ரசிகர்களை இளையராஜா சந்தித்தார்,ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா,

நீங்கள் தான் எனக்கு வாழ்த்து சொல்கிறீர்கள்.என் மகளை பறிகொடுத்த காரணத்தினால் எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை.உங்களுக்காக தான் இந்த கொண்டாட்டம் எல்லாம் என கூறினார்.

Tags

Next Story