நடிகை தீபா தனது கணவருடன் வாழ விரும்புவதாக மனு

நடிகை தீபா தனது கணவருடன் வாழ விரும்புவதாக மனு

கணவருடன் நடிகை தீபா 

பிரபல சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தன் கணவருடன் வாழ விரும்புவதாக மனு அளித்தார்.
பிரபல சின்னத்திரை நடிகை தீபா காதல் திருமணம் செய்த தன்னுடைய கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி போடப்பட்ட வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. தனியார் சேனல்களில் வெளியாகும் தொடர்களில் நடித்து வரும் தீபா, கணேஷ் பாபு என்பவரை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். கணவரின் சகோதரர் ராமகிரிவாசன் மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதால் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது என்றும் மனு அளித்து இருந்தார். தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ்வதையே தான் விரும்புகிறேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story