அரண்மனை 4 திரைப்படத்தின் மூன்று நாட்களின் வசூல் வேட்டை !!!

அரண்மனை 4 திரைப்படத்தின் மூன்று நாட்களின் வசூல் வேட்டை  !!!

அரண்மனை 4

சுந்தர் சி இயக்கி நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4 ஏற்கனவே வெளிவந்த மூன்று அரண்மனை திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெளிவந்துள்ளது.

ஆனால் வழக்கம் போல் உள்ள கதை களத்தை மாற்றி ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல திகில் கலந்த நகைச்சுவை படத்தை கொடுத்துள்ளார் சுந்தர் சி பெரும்பான்மையான விமர்சனங்களாக இருக்கிறது.

மக்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா, விடிவி கணேஷ் ,கோவை சரளா ,யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர்.

முதல் நாளில் இருந்து இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் மூன்று நாட்கள் கடந்து சென்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அரண்மனை 4படம் உலக அளவில் இதுவரை ரூபாய் 24 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவே அரண்மனை 4 கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என கூறுகின்றனர்.

Tags

Next Story