அனைவருக்கும் செக் வைத்த பிக் பாஸ் - கண்கலங்கிய ஜாக்குலின் !!

அனைவருக்கும் செக் வைத்த பிக் பாஸ் - கண்கலங்கிய ஜாக்குலின் !!

 பிக் பாஸ் 

பிக் பாஸ் சீசன் 8 கடந்த வாரம் பிரமாண்டமாக துவங்கிய நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். 18 போட்டியாளர்கள் களமிறங்கியதையடுத்து, 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நாமினேஷன் நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் வாங்கிய சாச்சனா வீட்டிலிருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம்.. இருவரும் ஓடிச்சென்று எதிரில் இருக்கும் சேரில் அமர வேண்டும். ஒவ்வொரு ரவுண்டுக்கு ஒரு சேர் குறைக்கப்பட்டு, யார் சேர் இல்லாமல் கடைசியாக நிற்கிறாராரோ அவர் போட்டியில் இருந்து வெளியில் செல்வார். இதிலிருந்து தர்ஷிகா வெற்றிபெற்று, முதல் வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இரண்டாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. இதில், ஆண்கள் அணியில் இருந்து ஒரு பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு ஒருவரும் விளையாட வரவேண்டும், அவரை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி, ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் செக் வைத்து பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான பேச்சு வார்த்தை நடந்த நிலையில், சுனிதாவிற்கும் ஜாக்லினிற்கும் இடையே கடும் விவாதம் நடந்தது. இதில் பேச்சுவார்த்தையில் இருந்து எழுந்து சென்று ஜாக்குலின் தனியாக அழுகிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story