ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை : உண்மையை உடைத்த மனைவி !!

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை : உண்மையை உடைத்த மனைவி !!

ஜெயம் ரவி - ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து நாளுக்கு நாள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

முதலில் ஜெயம் ரவி விவாகரத்து அறிவித்த நிலையில் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது, ஒருதலையாக எடுத்த முடிவு என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டார். மேலும் ஜெயம் ரவியை சந்தித்து பேச பல முறை முயற்சித்தும் முடியவில்லை என அந்த அறிக்கையில் அவர் கூறி இருந்தார்.

அதன் பின் ஜெயம் ரவியை ஆர்த்தி கொடுமைப்படுத்தியதாக சில தினங்கள் முன்பு செய்தி வெளியான நிலையில் ஜெயம் ரவிக்கு தனியாக வங்கி கணக்கு கூட இல்லை எனவும் அனைத்துக்கும் மனைவியிடம் தான் கேட்டு வாங்க வேண்டும், சின்ன செலவுக்கு கூட அசிங்கப்படுத்துவார். அனைத்து சொத்தும் இருவரது பெயரில் தான் இருக்கிறது எனவும் செய்தி வெளியானது.

மேலும் ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து எடுத்த படங்கள் பெரிய நஷ்டம் என கூறியுள்ளார், ஆனால் விசாரித்தால் அவை நஷ்டம் எல்லாம் இல்லை எனவும் தகவல் கிடைத்தது.

இந்நிலையில் ஆர்த்தி புது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். "நான் அமைதியாக இருப்பது என்னுடைய குற்ற உணர்ச்சி அல்ல என்பதை வலியுறுத்துவது முக்கியம். நான் கண்ணியமாக இருக்கவும், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் தேர்வு செய்துள்ளேன், ஆனால் நீதி வழங்கும் சட்ட அமைப்பை நான் நம்புகிறேன்.

நான் முந்தைய அறிக்கையில் சொன்ன விஷயம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. விவாகரத்து பற்றி பேச்சுவார்த்தையில் இருந்தது எனக்கு தெரியாது என கூறவில்லை. அந்த விவாகரத்து அறிவிப்பு இருவரது ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது என சொல்வது பொய், அது பற்றி எனக்கு தெரியாது என்று தான் கூறினேன்.

இதுபற்றி தனியாக பேச நான் தற்போதும் தயாராக இருக்கிறேன். தற்போது வரை அது மறுக்கப்பட்டு வருகிறது.

நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வில் உள்ளது, மேலும் வழிகாட்டுதலுக்கான கடவுளின் அருளை நான் நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

Tags

Next Story