போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிவேதா பெத்துராஜ் !! என்ன நடந்தது ??

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிவேதா பெத்துராஜ் !! என்ன நடந்தது ??

நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் நடு ரோட்டில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து பொதுவாக என் மனசு தங்கம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளிவந்த வெப் சீரிஸில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரிகள் அவரது காரை வழிமறித்து வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று கூறியதாகவும், கார் டிக்கியை திறந்து காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோது நிவேதா பெத்துராஜ் முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இதனை வீடியோ எடுத்த நபர் மீதும் நிவேதா ஆத்திரப்பட்டு மொபைலை கீழே தள்ளிவிட்டது போன்ற காட்சியும் அதில் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து இது உண்மையாக நடந்த நிகழ்வா? அல்லது ஏதேனும் ஒரு திரைப்படத்திற்கான புரமோஷனா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக இந்த வீடியோவில் உள்ள காவல்துறை அதிகாரி காலில் ஷூ அணியாமல் இருப்பதை பார்த்து கண்டிப்பாக இது திரைப்பட புரமோஷன் ஆகத்தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர். உண்மையை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Next Story