கடவுளே அஜித்தே கோஷம் - இதை உடனே நிறுத்தும்படி அறிக்கையை வெளியீட்ட அஜித் !!

Ajith
நிகழ்ச்சி மற்றும் பொது இடங்களில் கடவுளே அஜித்தே என வரும் கோஷம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் டிடிவி தினகரன் கட்சி நிகழ்ச்சியில் அந்த கோஷம் எழுப்பப்பட்டது சர்ச்சை ஆனது.
இந்நிலையில் அஜித் இதை உடனே நிறுத்தும்படி ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'கடவுளே அஜித்தே' என்று இந்த கோஷம் எனக்கு கவலை அளித்துள்ளது.
எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகர்யத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்களை ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
வாழு & வாழ விடு.
அன்புடன் அஜித் குமார்.
என்று அந்த அறிக்கையில் நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.