பிரியங்கா vs மணிமேகலை சர்ச்சை : சொந்த விஷயங்களை வைத்து இழிவுப்படுத்தக்கூடாது - நிஷா கருத்து !!

பிரியங்கா vs மணிமேகலை சர்ச்சை : சொந்த விஷயங்களை வைத்து இழிவுப்படுத்தக்கூடாது - நிஷா கருத்து !!

நிஷா

குக் வித் கோமாளி ஷோவில் தொகுப்பாளராக 5வது சீசனில் கலந்துகொண்டார் மணிமேகலை. தன் வேலையை செய்ய விடாமல் போட்டியாளராக வந்த ஒரு பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தன் வேலையை கெடுப்பதாக கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காரணத்தையும் தெரிவித்தார்.

அன்றில் இருந்து வீடியோ போட்ட அவர் அவரது வேலையை பார்க்கின்றனர், ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் நிறைய கேள்வி பலரும் கேட்டு வருகிறார்கள்.

கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அறந்தாங்கி நிஷாவிடம், மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், சம்பவ தினத்தன்று நான் அங்கே இல்லை, என்ன நடந்தது என்று தெரியாமல் இரு தரப்பிலும் விசாரிக்காமல் கருத்துக்களை தெரிவிக்க முடியாது என்றும்,

ஒரு தொழில்சார்ந்து ஒருவர் மீது குறை கூறப்பட்டால் அதைப்பற்றி மட்டுமே பேச வேண்டும் என்றும்,

அவர்களது சொந்த விஷயங்களை வைத்து அந்த பெண்ணை இழிவுப்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

Tags

Next Story