செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு ஆறு மாதம் சிறை

செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு ஆறு மாதம் சிறை

கைதான தயாரிப்பாளர்

செக் மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

செக் மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சினிமா பைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டில் பைனான்சியர் ககன் போத்ராவிடம் திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் 45 லட்சம் கடன் வாங்கினார்.

கடன் தொகைக்காக ககன் போத்ராவிடம் வழங்கிய காசோலை வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. ஜெ.சதீஷ்குமார் மீது பைனான்சியர் ககன் போத்ரா காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

Tags

Next Story