விரைவில் எதிர்நீச்சல் 2வது சீசன் - சீரியலை விட்டு விலகுவதாக பிரபலம் அறிவிப்பு !!

விரைவில் எதிர்நீச்சல் 2வது சீசன் - சீரியலை விட்டு விலகுவதாக பிரபலம் அறிவிப்பு !!

எதிர்நீச்சல்

சன் டிவியில் திருச்செல்வம் ஒளிபரப்பாகி வந்த தொடர் எதிர்நீச்சல். கடந்த 2022ம் ஆண்டு ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா என்ற 4 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

டிஆர்பியில் டாப்பில் வந்த நிலையில், குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு கதையில் கொஞ்சம் போர் அடிச்சிதுனே சொல்லலாம். இதனால் திடீரென 2024 கடந்த ஜுன் மாதம் தொடரை முடித்தார்கள்.

தொடர் முடிந்த பிறகு அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் நிறைய கேள்வி எழுப்பி வர இப்போது அதற்கான விடை தெரிவித்துள்ளனர். அதாவது விரைவில் எதிர்நீச்சல் சீரியல் 2வது சீசன் வரப்போகிறதாம், ஆனால் இதில் என்னால் நடிக்க முடியாது.

வேறொரு விஷயத்தை தொடங்கியிருக்கிறேன் என பதிவு போட்டுள்ளார் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா. அவர் எதிர்நீச்சல் சீசன் 2 வருவது சந்தோஷம் என்றாலும் நீங்கள் இல்லையா எனவும் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story