சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் !!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் !!
சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஹாஸ்பிடல் சென்ற மீனாவுக்கு மூன்று நாளைக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லி மாத்திரை கொடுத்து அனுப்புகிறார் டாக்டர். அவர்கள் இருவரும் ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியே வர ரோகிணியின் அம்மா கிரிஷை கூட்டிக்கொண்டு கண்ணீருடன் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார்கள்.

அவர்களிடம் சென்று கிரிஷுக்கு என்னாச்சு என்று கேட்க, விளையாடிட்டு இருக்கும்போது வண்டிக்காரன் ஏத்திட்டு போய்ட்டான் என சொல்லுகிறார். பிறகு கிரிஷை எமர்ஜென்சி வார்டுக்கு கூட்டி செல்ல, அவனுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இதனால் ரோகிணியின் அம்மாவுடன் முத்துவும் மீனாவும் இருக்கின்றார்கள்.

அதன் பின்பு ரோகிணியின் அம்மா ரோகிணிக்கு போன் பண்ண அதனை மனோஜ் எடுக்கிறார். பின்பு உனக்கு தான் போன் என ரோகிணி இடம் கொடுக்க அவர் நம்பரை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார். ஆனாலும் அது என்னோட கிளைன்ட் தான் என்று தனியாக போய் பேசுகிறார். இதன்போது உனக்கு தானே கால் பண்ண கூடாது என்று சொல்லி இருக்கேன் என அவரது அம்மாவுக்கு திட்ட, அவர் அழுது கொண்டு கிரிஷ்ஷ ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கேன் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

ரோகிணி என்னாச்சு என்று கேட்க, நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி முத்து மீனா இங்கே இருக்காங்க இப்போ வராத என்று சொல்கிறார். அதற்கு அவங்க எப்படி அங்க? நீ போன் பண்ணி சொன்னியா என்று கேட்க, இல்ல மீனாவுக்கு உடம்பு சரியில்ல அதனால வந்திருக்காங்க. அவங்க போனதும் போன் பண்றேன் நீ கிளம்பி வா என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

இதை தொடர்ந்து மகனை பார்க்க வேண்டும் என்ற பதட்டத்தில் கடை விளம்பரத்திற்காக சில பொருட்கள் எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறார். அங்கே நாங்கள் புதுசா ஹோம் அப்ளையன்ஸ் கடை திறந்து இருக்கிறோம் இப்போதைக்கு இந்த பொருளை பிரியா தாரோம் என்று சொல்லி குழந்தைகள் இருக்கும் வார்ட்டில் எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டு வர இறுதியில் க்ரிஷ் இருக்கும் ரூமுக்கு வரும்போது முத்து மீனாவும் வெளியே வருகின்றார்கள்.

இதை பார்த்து ரோகிணி அதிர்ச்சியடைந்து நிற்க, நீங்க இங்க எங்க என்று மீனா கேட்கிறார். அதற்கு நான் பிசினஸ் விஷயமாக கதைக்க வந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறார். இதை கேட்டு முத்துவும் இந்த ஐடியா நல்லா தான் இருக்கு நீ வைக்கிற பொருளை என்னோட விசிட்டிங் காட்டையும் சேர்த்து வை. கார் தேவைப்படுறவங்க எனக்கு போன் பண்ணுவாங்க என்று சொல்லுகிறார்.

பிறகு ரோகிணி நீங்க கிளம்பலையா என்று கேட்க, க்ரிஷ்க்கு என்ன சொல்றான்னு பாத்துட்டு கிளம்புவோம் என்று சொல்லி, கேன்டினுக்கு செல்கிறார்கள். அடுத்து உள்ளே வந்த ரோகினி கிரிஷை பார்த்து அழுது புலம்பி உண்ட விஷயத்தில் எதுவுமே என்னால பண்ண முடியல என்று கண்கலங்க அவரது அம்மா சீக்கிரமே உன் வீட்டுல கிரிஷை பத்தி பேசு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதன்பின் ரோகினி வெளியே வர மீனா அவரைப் பார்த்து வேலை முடிஞ்சிடுச்சா என்று கேட்க. ஆம் என்று சொல்லிவிட்டு மீண்டும் நீங்க வீட்டுக்கு இன்னும் கிளம்பலையா என்று கேட்கிறார். அதற்கு மீனா நாங்கள் க்ரிஷ் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு போறோம் என்று சொல்கின்றார்.

இதன் போது முத்து துபாயில் அந்த பொண்ணு அப்படி என்னதான் வேலை பார்க்குது. குழந்தையும் அம்மாவையும் இப்படி விட்டுட்டு. அப்படி என்ன அவசியம் இருக்கு வெளிநாட்டில் சம்பாதிக்க? அந்த பொண்ணு மட்டும் வந்தா நான் நாலு அடி கொடுக்கணும் என்று கோபப்பட, அது எதுக்கு உங்களுக்கு என்று ரோகினி கேள்வி கேட்டு சிக்கிக் கொள்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Tags

Next Story