வீட்டை விட்டு வெளியேறி மாணவிகள்: கடத்தப்பட்டதாக நாடகம்

வீட்டை விட்டு வெளியேறி மாணவிகள்: கடத்தப்பட்டதாக நாடகம்

காவல் நிலையம்

ஆவடியில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நிலையில், கடத்தப்பட்டதாக பள்ளி மாணவிகள் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு ஆவடியிலிருந்து சென்னை வந்த மாணவிகள் இருவர், தங்களை சிலர் கடத்திவிட்டதாகக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர், நேற்று முன்தினம் பிராட்வே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.

திடீரென அவர்கள், தங்களை கடத்தல் கும்பல் கடத்தியதாகவும், தற்போது இங்கே விட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறி கதறி அழுதனர். இதைக் கண்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து பூக்கடை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடம் விரைந்து மாணவிகளை மீட்டு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் மாணவிகளை யாரும் கடத்தவில்லை என்பதும், அவர்கள் குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுவெளியேறியதும் தெரியவந்தது.

இதையடுத்து, மாணவிகளின் பெற்றோரை நேரில் வரவழைத்து 2 மாணவிகளையும் போலீஸார் அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமிகள் இருவரும் ஆவடியில் உள்ளபள்ளி ஒன்றில் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். தோழிகளான இவர்களில் ஒருவரைகடந்த 6-ம் தேதி அவரது தாயாரும், சகோதரரும் திட்டி உள்ளனர்.

Tags

Next Story