சேலத்தில் தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது

சேலத்தில் தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது

சேலத்தில் தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது

சேலத்தில் தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது
சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 43), கூலித்தொழிலாளி. இவருடைய மகன் ராஜ், சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராஜியிடம் தகராறு செய்தனர். இதை பார்த்து அங்கு சென்ற விஜய் மகனிடம் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அவர்களில் ஒருவன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து விஜய்யை குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டான். இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யை கத்தியால் குத்தியதாக கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சின்னவர் (41), கவுதம் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story