போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது
பெருந்துறை வாய்க்கால் மேட்டில் மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து அப்பகுதிகளிலுள்ள மளிகை கடைகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்..அப்போது மூன்று மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 ஆயிரத்து 319 ரூபாய் மதிப்புள்ள 26 கிலோ 450 கிராம் குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த அதன் உரிமையாளர்கள் எட்வர்ட்,அருண்குமார், பாலசுப்பிரமணி ஆகியோரை கைது செய்து குட்கா பொருட்கள் மற்றும் ரூ. 2,10,000 ரொக்கம் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பெருந்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story