பணம் வைத்த சூதாடிய 3- பேர் கைது.ரூ.150 பறிமுதல்.

விஸ்வநாதபுரி அருகே பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 150 பறிமுதல்.
விஸ்வநாதபுரி அருகே பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது ரூபாய் 150 பறிமுதல். கரூர் மாவட்டம் , க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, விஸ்வநாதபுரி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவகாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 16ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் விஸ்வநாதபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, விஸ்வநாதபுரி, தெற்கு தெருவை சேர்ந்த சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராசு மற்றும் பிரபாகரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150-ஐயும் பறிமுதல் செய்தனர். பின்னர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை க.பரமத்தி காவல்துறையினர்.காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்

Tags

Next Story