வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை கொள்ளை.

அரவக்குறிச்சியில் வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை கொள்ளை. காவல்துறை விசாரணை

அரவக்குறிச்சியில் வீட்டின் கதவை உடைத்து 36- பவுன் தங்க நகை கொள்ளை. காவல்துறை விசாரணை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, அம்மன் நகரில் வசித்து வந்தவர் இயேசுதாஸ் மனைவி சம்மனசுமேரி. வயது 55 . இவர் அருகில் உள்ள மோளையாண்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தாருடன் டிசம்பர் 8ஆம் தேதி தஞ்சாவூருக்கு சென்று விட்டு மீண்டும் டிசம்பர் 10ஆம் தேதி இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தவர், வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 36 பவுன் தங்க நகை களவாடப்பட்டது கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சம்மனசுமேரி அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் குற்றவாளிகள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரித்தனர். மேலும், இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல்துறை வழக்கு பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகைகளை களவாடி சென்ற மர்மநபர்கள் குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Tags

Next Story