ஆசைக்கு இணங்க மறுத்த 50 வயது பெண் கொலை - சிறுவன் கைது

ஆசைக்கு இணங்க மறுத்த 50 வயது பெண் கொலை - சிறுவன் கைது

போலீசார் விசாரணை 

எடப்பாடி அருகே ஆசைக்கு இணங்க மறுத்த 50 வயது பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் இருப்பாளி ஊராட்சிக்குட்பட்ட குருக்குப்பட்டியில் நேற்று முன்தினம் 12ம் தேதி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி 50 வயது பெண் பெருமாயி தலையில் கல்லைப்போட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இத்தகவலறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்தவ மனைக்கு அனுப்பி வைத்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் லில்லி வரவழைத்தும் 2 தனிப்படை அமைத்தும் விசாரணையை தீவிரபடுத்தினர்.


தொடர்ந்து விசாரணையில் மாற்றுத்திறனானி பெருமாயி தனிமையில் குடியிருந்து வந்ததும், பேரன் வகையில் உறவினரான ஜலகண்டாபுரம் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மாணவன் சம்பவத்தன்று இரவு வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று சிறுவன் மது மற்றும் கஞ்சா போதையில் சென்று பெருமாயிடம் பணம் கேட்டும் ஆசைக்கு இணங்கவும் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர் பெருமாயியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது... உடனடியாக சிறுவனை கைது செய்த பூலாம்பட்டி போலீசார் சேலம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 17 வயது சிறுவனின் ஆசைக்கு மறுத்த 50 வயது பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story