போலி பாஸ்போா்ட் வைத்திருந்த 8 பயணிகள் கைது

போலி பாஸ்போா்ட் வைத்திருந்த 8 பயணிகள் கைது

பைல் படம் 

திருச்சி விமான நிலையத்துக்கு போலி பாஸ்போா்ட்டுடன் வந்த 8 பயணிகளை விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் பாஸ்போா்ட்டை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது மலேசியா செல்ல முயன்ற ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் (48), அப்துல் ரஹீம் (52), அரபி முகமது (53), ருத்ர பசுபதி (60), திருச்சி பீமநகரைச் சோ்ந்த சாகுல் ஹமீது (55), மலேசியாவிலிருந்து திரும்பிய ராமநாதபுரத்தைச் சோ்ந்த போஸ் (53), சிங்கப்பூா் செல்ல இருந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த ஆரோக்கியசாமி (43), கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த முகமது ராவுத்தா் (54)ஆகிய 8 பேரிடமும் போலி பாஸ்போா்ட் இருந்தது தெரியவந்தது. இவா்கள் பிறந்த தேதி மற்றும் பெயரை மாற்றி போலி பாஸ்போா்ட் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீஸாா்வழக்குப் பதிந்து 8 பேரையும் கைது செய்தனா்.

Tags

Next Story