காவலரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற சக காவலர் கைது

காவலரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற சக காவலர் கைது

ஆயுதப்படை 

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெரம்பலூரில், போலீஸ்காரரின் மனைவியை வாயை பொத்தி பலத்காரம் செய்ய முயன்ற மற்றொரு போலீஸ்காரர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்தார் .

பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே உள்ள ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிப்பு உள்ளது. அங்கு, போலீசாக பணிபுரிபவரின் மனைவி பிப்.13ம் தேதி இரவு வீட்டு வாசலில் நின்றுக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதேகுடியிருப்பில் போலீசாக இருக்கும் பிரபாகரன் மது போதையில் இருந்துள்ளார். அவர் போன் பேசிக் கொண்டு இருந்த சக காவலரின் மனைவியை வாயை பொத்தி, மொட்டை மாடிக்கு தவறான நோக்கத்தில் தூக்கி சென்றார்.
பிரபாகரனை தள்ளிவிட்டு தப்பி வந்த அவர் தனது கணவரிடம் இது குறித்து தெரிவித்தார். பின்னர், இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், பிரபாகரன் மீது, பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் போலீசார் பிரபாகரனை பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக போலீசாரின் மனைவிக்கே போலீஸ் குடியிருப்பில் பாதுகாப்பு இல்லை. என்பது சக போலீசார் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story