முதியவர் மீது லாரி மோதி விபத்து.

நடந்து சென்ற முதியவர் மீது லாரி மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

நடந்து சென்ற முதியவர் மீது, வேகமாக வந்த லாரி மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், வெள்ளியணை ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் வயது (62). இவர் டிசம்பர் 2ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில், கரூர்- திண்டுக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வெள்ளியனை பகுதியில் செயல்படும், மல்லிகை ரெஸ்டாரன்ட் அருகே வந்தபோது, அதே சாலையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, தெற்கு குட்டை கடை பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் வயது (27) என்பவர், வேகமாக ஓட்டி வந்த லாரி, நடந்த சென்ற பெருமாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பெருமாளுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததனர். இச்சம்பவம் அறிந்த, பெருமாளின் பேத்தி பரமேஸ்வரி வயது 31 என்பவர், இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று லாரியை வேகமாக ஓட்டி,விபத்து ஏற்படுத்திய, அருண் பிரகாஷ் மீது வெள்ளியணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Tags

Next Story