புதுக்கடை அருகே கணவரை பிரிந்து வசித்து வந்த இளம்பெண் தற்கொலை

புதுக்கடை அருகே கணவரை பிரிந்து வசித்து வந்த இளம்பெண் தற்கொலை

காவல் நிலையம் 

புதுக்கடை அருகே கணவனை பிரிந்த இளம் பெண் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதி தாழவிளை பகுதியை சேர்ந்தவர் காஜல்ராஜ் மனைவி அஸ்வினி.இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இரவு அஸ்வினி படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அஸ்வினியின் தந்தை மனோகரன் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஸ்வினியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே அஸ்வினிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளை ஆனதால் பத்மநாபபுரம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story