போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

ராஜு 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் மையவாடி தெருவை சேர்ந்த ராஜு (54) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா புலன் விசாரணை செய்து கடந்த 18.06.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் நேற்று குற்றவாளியான ராஜுவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Tags

Next Story