அரிவாளை காட்டி போலீசை மிரட்டிய குற்றவாளி - துப்பாக்கி சூடு

அரிவாளை காட்டி போலீசை மிரட்டிய குற்றவாளி - துப்பாக்கி சூடு

சம்பவம் நடந்த இடம் 

பெருந்துறை அருகே பதுங்கிய பதுங்கிய கொலை குற்றவாளிகளை பிடிக்க வந்த போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டிய ரவுடி கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இருப்பினும் அந்த கும்பல் தப்பியோடியது.
திருநெல்வேலி மாவட்ட பகுதியில், கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பு மற்றும் 4 குற்றவாளிகள் பெருந்துறை அருகே குள்ளம்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நெல்லையில் இருந்து வந்த உதவி ஆய்வாளர் ஆன்ட்ரோ மற்றும் 6 போலீசார், குற்றவாளிகளை சுற்றி வளைக்க முயற்சித்தனர். அப்போது உதவி ஆய்வாளரை, சிவசுப்பு அரிவாளை கொண்டு தாக்க முயற்சித்துள்ளார். அப்போது பாதுகாப்பிற்காக உதவி ஆய்வாளர் தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரவுடி கும்பல் தப்பி தலைமறைவானது. உதவி ஆய்வாளர் ஆன்ட்ரோ அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story