விவசாய கடனில் மோசடி - கூட்டுறவு பணியாளர்கள் 4 பேர் கைது

கீழ் பெண்ணாத்தூர் அருகே தச்சம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.8.30 லட்சம் கையாடல் செய்த 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் அடுத்த தச்சம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாளர்களான,அள்ளிக் கொண்டாபட்டு ஜெய்சங்கர், தச்சம்பட்டு சங்கரமூர்த்தி, பெரிய கள்ளப்பாடி பிரதீஷ் குமார், அள்ளிக்கொண்ட அருணகிரி ஆகியோர் சங்கத்தில் பணிபுரிந்த போது விவசாய கடன் மற்றும் பணியாளரின் சம்பள கணக்குகளில் பொய் ஆவணங்கள் தயார் செய்து சுமார் 8.30 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணைக்குப் பிறகு திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி நால்வரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story