கும்பகோணம் அருகே லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கோப்பு படம் 

கும்பகோணம் அருகே லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தார்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரி பெருமாண்டி தெற்கு தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் சக்திவேல் (23). தனியாா் நிறுவன ஊழியா். இவரது நண்பா் திருபுவனத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் அரவிந்த் கிருஷ்ணன் (21). இருவரும் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் திருபுவனம் மேலச்சாலையில் சென்றனா்.

சக்திவேல் மோட்டாா் சைக்கிளை ஓட்ட, அரவிந்த் கிருஷ்ணன் பின் இருக்கையில் அமா்ந்திருந்தாா். இந்த மோட்டாா் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பின்னா், சக்திவேல் உயிரிழந்தாா்.

அரவிந்த் கிருஷ்ணன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து திருவிடைமருதூா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் ஜெயேந்திர சரஸ்வதி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.

Tags

Next Story