ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : போலீசார் தாக்கல் செய்த 5000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கை செம்பியம் !!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : போலீசார் தாக்கல்  செய்த  5000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கை செம்பியம் !!!

ஆம்ஸ்ட்ராங் கொலை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்ட 30 பேர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கை செம்பியம் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே சிறையில் உள்ள பிரபல ரவுடியான நாகேந்திரன் அவரது மகனும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிமான வழக்கறிஞர் அஸ்வத்தமான் ஆற்காடு சுரேஷின் தம்பி, பொண்ணை பாலு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பத்து வழக்கறிஞர் என மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் இல் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக உள்ள சந்தோஷ், செந்தில் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த குற்ற பத்திரிக்கையில் இருப்பதாவது ; பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாகவும் அவரது சகோதரர் பொண்ணை பாலு, பெண் தாதாவான அஞ்சலை உள்ளிட்டோர் ஓராண்டாக சதி திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங் கூடவே இருந்து அவரை கொல்ல திட்டம் தீட்டிய அஸ்வத்தாமன் வீட்டை காலி செய்வது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் முன்பகை ஆகியவை குறித்து குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவருடன் முன் விரோதத்தில் இருந்த எல்லா தரப்பினரும் ஒன்றாக சேர்ந்து சதி திட்டம் தீட்டியதாகவும் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள வீட்டு அருகே ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் இந்த கொலைக்கு பண உதவி செய்தது தொடர்பான வங்கி ஆவணங்கள் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி, கையெறி குண்டுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்ற ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற பத்திரிக்கை ஏற்கப்பட்ட பிறகு எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story