மார்த்தாண்டம் அருகே அரசு போக்குவரத்து ஓட்டுனர் மீது தாக்குதல்

மார்த்தாண்டம் அருகே அரசு போக்குவரத்து ஓட்டுனர் மீது தாக்குதல்

காவல் நிலையம்

மார்த்தாண்டம் அருகே அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினர்.

மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் கிணற்றுவிளையை சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவர் குழித்துறை அரசு போக்குவ ரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தோமஸ் என்பவருக்கும் இடையே நாய் மீது கல் வீசியது தொடர்பாக பிரச்சனை இருந்து வந் தது.

சம்பவத்தன்று மாலை வீட்டு முன்பு வைத்து தோமசும், அவரது மனைவி ரோசம் மாளும் சேர்ந்து சுரேஷ் குமாரை தகாத வார்த்தைகளால் பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த சுரேஷ் குமார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தோமஸ் மற்றும் அவரது மனைவி ரோசம்மாள் ஆகிய 2 பேர் மீதும் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags

Next Story