வங்கி உதவி மேலாளரை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி கைது

வங்கி உதவி மேலாளரை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி கைது

அபிலாஷ் 

திருவள்ளூர் அருகே மணவாள நகரில் தனியார் வங்கி உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இணைந்த ஏடிஎம் மையத்தில் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் ( வயது 35) பணம் எடுக்க சென்றார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் டெல்லியிலிருந்து வந்திருந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஏடிஎம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்தனர். அப்போது அபிலேஷ் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி இருக்கின்றார்.

இதனால் வங்கி ஊழியர் மெஷின் சர்வீஸ் செய்வததாகவும் பணம் எடுக்கக் கூடாது என கூறியுள்ளார். அதைப் மீறியும் ஏடிஎம் கார்டை போட்டு உள்ளார். இதை பார்த்த வங்கி உதவி மேலாளர் பிரதீப் வந்து கேட்டபோது வங்கி உதவி மேலாளரை அசிங்கமாக திட்டி கைகளால் அடித்து தாக்கியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மணவாள நகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிலாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story