திருவள்ளூரில் வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது

திருவள்ளூரில் வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி  கைது
வங்கி உதவி மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி 
திருவள்ளூரில் ஏ.டி.எம். மையத்தில் வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இதியன் ஏடிஎம் மையத்தில் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் (35) பணம் எடுக்க சென்றார்.

அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் டெல்லியிலிருந்து வந்திருந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஏடிஎம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்தனர். அப்போது அபிலேஷ் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி இருக்கின்றார். இதனால் வங்கி ஊழியர் மெஷின் சர்வீஸ் செய்வததாகவும் பணம் எடுக்கக் கூடாது என கூறியுள்ளார்.

அதைப் மீறியும் ஏடிஎம் கார்டை போட்டு உள்ளார். இதை பார்த்த வங்கி உதவி மேலாளர் பிரதீப் வந்து கேட்டபோது வங்கி உதவி மேலாளரை அசிங்கமாக திட்டி கைகளால் அடித்து தாக்கியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மணவாள நகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிலேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story