திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 
திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் ரதிபாரதி (20). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் (22) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணமான 10 நாட்களில் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரதிபாரதியை அவரது தாயார் வீட்டில் விட்டுவிட்டு கணவர் சென்றுவிட்டாராம். பின்னர் அவரை தொடர்பு கொள்ளவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்த ரதிபாரதி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி (பொ) ஜெயராஜ் வழக்குப் பதிவு செய்துள்ளார். திருமணமான 2 மாதங்களில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story