தம்பியை கட்டையால் தாக்கிய அண்ணன் கைது

தம்பியை கட்டையால் தாக்கிய அண்ணன் கைது

கைது

சொத்து பிரச்சனையில் தம்பியை கட்டையால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
தட்டார்மடம் அருகே சொத்து பிரச்சனையில் தம்பியை கட்டையால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவகுறிச்சி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன்களான முத்துப்பாண்டி (44) மற்றும் அவரது சகோதரர் லிங்கபாண்டி (53) ஆகிய இருவரும் அருகருகே வசித்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (27.10.2023) முத்துப்பாண்டி தனது வீட்டில் வைத்து அவரது சகோதரர் லிங்கபாண்டியிடம் சொத்து தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் லிங்கபாண்டி, முத்துப்பாண்டியை தவறாக பேசி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகமது ரபிக் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு லிங்கபாண்டியை கைது செய்தார்.

Tags

Next Story