நட்டாலத்தில் உறவினர்கள் மோதல்: பெண் உட்பட இருவர் காயம்

நட்டாலத்தில் உறவினர்கள் மோதல்: பெண் உட்பட இருவர் காயம்

காவல் நிலையம் 

நட்டாலத்தில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட இருவர் காயம். 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் மணி.இவருக்கும் இவரது சகோதரர் குடும்பத்தாருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத் தன்று மணி தனது வீட்டு அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த உறவினர் கமலம் அவரது கணவர் ராஜாமணி ஆகியோர் மணியை வம்பிழுத்து கம் பால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

இதை அடுத்து மணியை அக்கம் பக்கத் தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையாகசேர்த்துள்ளனர்.இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு கமலும் தனது வீட்டின் முன்பு நின்ற போது அங்கு வந்த உறவினர்கள் மகேஷ்,தங்கம்,மணி ஆகிய மூன்று பேர் சேர்ந்து தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

இதை தொடர்ந்து கமலத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார் இந்த இரு சம்பவம் குறித்தும் ஐந்து பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

Tags

Next Story