ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு !

ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு !

பலி

சென்னையில் ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பேருந்து கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் கடந்த 4-ம் தேதி மாநில கல்லூரி மாணவர் சுந்தர் (19) என்பவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கொடூரமாக தாக்கி விட்டு தப்பினர். ரூட் தல விவகாரத்தில் இந்த மோதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதில் முதலாம் ஆண்டு பயிலும் சுந்தர், கடந்த நான்காம் தேதி முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை கொலை வழக்காக பெரியமேடு போலீஸார் மாற்றி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் ஆகியோரை பெரியமேடு போலீஸார் ஏற்கனவே கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு அல்லிக்குளத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வருகிற 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி போலீஸார் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story