தேன்கனிக்கோட்டை சிறுமியை கடத்திய ஒட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

தேன்கனிக்கோட்டை அருகே 17 வயது சிறுமியை கடத்திய ஒட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது
தேன்கனிக்கோட்டை அருகே 17 வயது சிறுமியை கடத்திய ஒட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி கிராமத்தில் வசிப்பவர் 17 வயது சிறுமி, இவர் 11 ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி சிறுமியின் தாய் கூலி வேலைக்கு சென்ற நிலையில் சிறுமி காணமால் போனார். சிறுமியை அவரது தாயும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ஜோசுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒட்டுநர் வேலை செய்யும் ஆஞ்சினப்பா (35) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. 17 வயது சிறுமியை கடத்திய குற்றத்திற்காக ஆஞ்சினப்பா மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story