குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் - கணவனை கொன்ற மனைவி

குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் - கணவனை கொன்ற மனைவி

கனகா 

அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திராநகரை சேர்ந்த ராஜா(40) கூலி தொழிலாளி. இவரது மனைவி கனகா(34). இந்நிலையில் ராஜா கடந்த ஒன்றாம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் தாய் ராதாமணி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரூர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில் அவரது மனைவி கனகாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது கனவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், எனது கணவர் கூலி தொழில் செய்து வருகிறார். தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து செக்ஸ் டார்ச்சர் செய்வார். சம்பவத்தன்று இரவில் அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்தார், பின்னர் என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினேன், அதை பொருட்படுத்தாமல் அவரது ஆசைக்கு இணங்க என்னை வற்புறுத்தினார், நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன், பின்னர் அவர் குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்தார். நான் மறுத்தேன் பின்னர் என்னை தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார். நானும் எனது தற்காப்புக்காக அவரை தாக்கினேன். அதில் அவர் மயக்கம் அடைந்து விட்டார் என்று எண்ணி நான் கதவை தாளிட்டு உறங்கச் சென்று விட்டேன். மீண்டும் எழுந்து வந்து பார்த்த போது எனது கணவர் அங்கேயே இருந்தார் அவரை நான் தட்டி எழுப்பிய போது அவர் சுயநினைவின்றி இருந்தார் அவர் இறந்துவிட்டார், என்ற எண்ணி யாருக்கும் தெரியாமல் அவரை தர வர இழுத்துச் சென்று வரட்டாறு ஓடையில் அவரது சடலத்தை வைத்து விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். யாருக்கும் தெரியாமல் இருக்கும் என நினைத்திருந்தேன் ஆனால் போலீசாரின் விசாரிப்பில் நான் மாட்டிக்கொண்டேன் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story