போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள உணவகத்தில் ஒரு நபர் தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி, அவ்வுணவகத்தில் சாப்பிட்டு விட்டு அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதில் சில குறைகள் உள்ளது. இதற்கு அபராதமாக ரூ.1,00,000/- அரசுக்கு கட்ட வேண்டும். இல்லையெனில், நான் கூறுகின்ற செல் நம்பருக்கு ரூ.10,000/- அனுப்புமாறு கூறியதாகவும். ஆனால், உணவகத்தினர் உணவகத்தின் உரிமையாளர் வந்ததும். அனுப்புகிறோம் எனக்கூறியதாகவும் தெரியவருகிறது. அதன் பிறகு உணவகத்தின் உரிமையாளர் மேற்படி உணவு பாதுகாப்பு அதிகாரியாக வந்தவரை பற்றி விசாரணை செய்த போது, அந்த நபர் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக இல்லை என தெரியவந்தது. உடனடியாக உணவகத்தின் உரிமையாளர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 -ஐ தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, போலி நபரை பிடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு, உணவு பாதுகாப்பு அதிகாரியாக ஏமாற்றிய திருமுருகன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். விசாரணையில் இந்த திருமுருகன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும். இவர் B.E மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் 2018-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்சமயம் மண்ணச்சநல்லூர் DK IAS அகாடமியில் பணிபுரிந்து வருவதாக தெரிய வருகிறது. மேலும், இவர் மீது கோயம்புத்தூர். நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயுத வழக்குகள், மோசடி வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 7 வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags

Next Story