கும்பகோணம் அருகே நிலத்தகராறி விவசாயி அடித்து கொலை

கும்பகோணம் அருகே நிலத்தகராறி விவசாயி  அடித்து கொலை

கொலை செய்யப்பட்ட விவசாயி

கும்பகோணம் அருகே நிலத்தகராறி விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில், சமுத்துனார்குடியை சேர்ந்த வாஞ்சிநாதன்,55,. விவசாயியான இவர், தனது 1.29 ஏக்கர் நஞ்சை நிலத்தை, கோவனுார் கிராமத்தை சேர்ந்த கண்ணனிடம், அடமான குத்தகைக்கு விட்டிருந்தார்.

அந்த நிலத்தை கண்ணன், தனக்கு பதிவு செய்து தர வேண்டும் எனக்கூறி, அந்த நிலத்தை வாஞ்சிநாதனிடம் திரும்ப, வழங்கவில்லை. இது தொடர்பாக, கும்பகோணம் குடிமையியல் நீதிமன்றத்தில், வாஞ்சிநாதன், வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு வாஞ்சிநாதனுக்கு சாதகமாக வந்தது. இந்நிலையில் வாஞ்சிநாதன், அந்த நிலத்தில் உள்ள கருவேல மரங்களை நேற்று காலை வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கண்ணனின் சகோதரர் குமார்,40,. வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு, ஆத்திரமடைந்த குமார், தான் கையில் வைத்திருந்த மண்வெட்டியால், வாஞ்சிநாதன் பின் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடி குமாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story