திருச்சியில் மீன் வியாபாரி சராமரியாக வெட்டிக் கொலை - கும்பலுக்கு வலை

திருச்சியில் மீன் வியாபாரி சராமரியாக வெட்டிக் கொலை - கும்பலுக்கு வலை

கொலை செய்யப்பட்ட ராமராஜ் 

திருச்சியில் மீன் வியாபாரியை நான்கு பேர் கொண்ட கும்பல் சாராமரியாக வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் திருநகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் ராமராஜ் (26), மீன் வியாபாரியான இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் திருச்சி குழுமணி மெயின் ரோட்டில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் மீன் கொள்முதல் செய்வதற்காக தனது நண்பர்கள் உடன் வந்தார் என கூறப்படுகிறது. அவர் வந்த காரை அருகில் நிறுத்திவிட்டு மீன் வாங்க சென்று விட்டு மீனை வண்டியில் ஏற்றும்போது , அதிகாலை 2 இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த நான்கு பேர்கொண்ட மர்ம கும்பல் ராமராஜை வெட்டுவதற்காகத் துரத்தினர்.அப்போது ராமராஜ் அங்கும் இங்கும் ஓடினார், ஆனாலும் விடாது துரத்திய அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக ராமராஜ்ஜை வெட்டியத்தில் பின்தலை, மற்றும் முதுகு பகுதியில்,படுகாயமடைந்த ராமராஜ் துடிதுடித்து உயிரிழந்தார். அப்போது மீன் வாங்க வந்த பொதுமக்கள் இந்த கொடூர சம்பவத்தை கண்டு அலறி அடித்து ஒடினார். இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராமராஜின் உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர், ராமராஜ் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பழிக்கு பழியாக இவரை கொன்று இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story